தஞ்சாவூர், அக். 29- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் மற்றும் வட்டம், சாமுமுதலி தெரு, அருள்மிகு மாரி யம்மன் திருக்கோயிலின் குழுக்கோயிலான பட்டுக் கோட்டை நகர், அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக் கோயிலுக்குச் சொந்தமான இடம் புனல்வாசல் (இராம கிருஷ்ணாபுரம்) கிராமத்தில் அமைந்துள்ள 7 ஏக்கர் 58 சென்ட் ரயத்துவாரி புன்செய் நிலமும், 2 ஏக்கர் 12 சென்ட் ரயத்துவாரி மனை நில மும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதுகுறித்து உயர் அதி காரிகள் ஆலோசனைப்படி தஞ்சாவூர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.நாகையா தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ஆர்.ரெங்கரா ஜன், பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் க.ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலையில், இக்கோயிலின் செயல் அலு வலர் என்.ரவிச்சந்திரன், ஆக்கிரமிப்புதா ரர்களி டையே சுமுகப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஆக்கிர மிப்புதாரர்களின் ஒப்புதலின் பேரில், திருக்கோயில் நிலம் சுவாதீனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பேரா வூரணி, சரக ஆய்வாளர் இரா.அமுதா, ஆத்தாளூர், வீரமாகாளியம்மன் திருக் கோயில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் திருக் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம். அந்த இடத்தில் ‘திருக்கோயிலுக்கு சொந்த மானது’ என்ற விளம்பர பதாகை அமைக்கப்பட்டது.