சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு சுற்றுலா சென்று விட்டு பயணிகளுடன் திரும்பிய மினி வேன் அடிவாரம் பகுதியில், சுங்கச்சாவடி அருகில் கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்துக்குள்ளானது.
சுற்றுலா வாகனத்தில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர், சுகாதாரத்துறையினர் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.