சேலம், நவ.27- மார்க்சிஸ்ட் கட்சியின் மேச் சேரி ஒன்றியச் செயலாளராக ஜி. மணிமுத்து தேர்வு செய்யப்பட் டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சேலம் மாவட்டம், மேச் சேரி ஒன்றிய 8 ஆவது மாநாடு, கட்சி ஒன்றிய அலுவலகத்தில், தோழர்கள் என்.சங்கரய்யா. சீதாராம் யெச் சூரி ஆகியோரது நினைவரங்கில் புதனன்று நடைபெற்றது. எஸ்.பெருமாள் செங் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஆர்.ஸ்டாலின் வரவேற்றார்.
பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஜி.மணி முத்து அறிக்கையை முன்வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், மேச்சேரி பேரூ ராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும். மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். ஜேஎஸ்டபிள்யு இரும்பாலையில் விவசாயத் திற்கும், மனிதர்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் சுற்றுச் சூழல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேச்சேரி ஒன்றியத் தில் சாயப்பட்டறை தொழில் வளா கம் அமைக்க வேண்டும். மேச்சேரி ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரி களை காவிரி சரபங்கா உபரிநீர் திட்டத்தில் இணைக்க வேண்டும். மேச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் மேச்சேரி ஒன்றியச் செயலாளராக ஜி.மணிமுத்து மற் றும் 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எ.ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் பி. அம்மாசி நன்றி கூறினார்.