விடுதலைப் போராட்ட வீரரும் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவருமான வி. பி. சிந்தனின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான வி. பி. சிந்தனின் 35-ஆம் ஆண்டு நினைவு தின இரத்ததான முகாம் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)சார்பில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா. ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் எஸ். கே. தியாகராஜன் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் வரவேற்புரையாற்றினார்.
மருத்துவ முகாமை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி எம். ரவீந்திரன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி வாழ்த்துரை வழங்கினார். மாநில குழு உறுப்பினர் ஏ. கோவிந்தன் நன்றி உரையாற்றினார். இதில் சிஐடியு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் அளித்தனர்.