ராணிப்பேட்டை, ஆக. 2 - ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியை சேர்ந்தவர் பரிமளா (45). இவர் கணவரை இழந்தவர். தனக்கு இலவசமாக வீட்டு மனை வழங்க வேண்டும் பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வெள்ளியன்று (ஆக. 2) வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.