districts

img

பள்ளி அருகே வழிந்தோடும் கழிவுநீர்

சென்னை, அக். 13- ஆவடி மாநகராட்சிக் குட்பட்ட திருமுல்லை வாயல் 8ஆவது வார்டில் ஆவடி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் உள்ள சில வகுப்பறைகள், கழிவ றையை சுற்றி செடி கொடி கள் வளர்ந்து காணப்படு கின்றன. மேலும் பள்ளி யின் பின்புறம் உள்ள 10ஆவது தெருவில் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகிறது. பள்ளி யின் வலது புறம் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி குப் பைக் கழிவுகள் கொட்டப் படுகின்றன. மாடுகளும் கட்டப்படுகின்றன. தற்போது பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். மேலும் 10ஆவது தெருவில் வசிக்கும் மக்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக் குள் இருக்கும் செடி கொடி களை முறையாக அகற்ற வேண்டும், சாலையில் ஓடும்  கழிவு நீரை தடுக்கவும், பள்ளிச் சுற்றுச்சுவர் அருகில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் மாணவர்களின் வளர்ச்சிக் காக பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வரு கிறது. எனவே மாணவர்க ளின் நலன் கருதி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் மேற்கண்ட குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.