districts

img

வாட்ஸ்அப் சாட், அழைப்புகளில் ‘ஃபேவரைட்ஸ்’ அம்சம்!

வாட்ஸ்அப் சாட், அழைப்புகளில் ‘ஃபேவரைட்ஸ்’ அம்சம்!

வாட்ஸ்அப் சாட் மற்றும் அழைப்புகளில், ‘ஃபேவரைட்ஸ்’ (Favourites) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சாட்களையும், அழைப்புகளையும் ‘ஃபேவரைட்ஸ்’ ஃபில்டரில் (Filter) சேர்ப்பதன் மூலம், அந்த காண்டாக்ட்களை (Contacts) எளிதாகக் கண்டறிந்து சாட் செய்யவும், கால் செய்யவும் முடியும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் செயலி ஆகிய தளங்களில் இந்த அம்சம் வரும் வாரங்களில் படிப்படியாக வழங்கப்பட உள்ளது. ஃபேவரைட்ஸ் அம்சம் பயன்படுத்துவது எப்படி?  1. சாட் பக்கத்திற்கு சென்று ஃபேவரைட்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பிய chats மற்றும் groups-ஐ தேர்வு செய்யவும்.  2. அதேபோல், கால்ஸ் (Calls) பக்கத்திற்கு சென்று  ஃபேவரைட்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பிய contacts-ஐ தேர்வு செய்யவும். 3. இதை அடுத்து, Settings-க்கு சென்று Favourites ஆப்ஷனில் உள்ள Add to Favourites-ஐ கொடுத்தால், ஃபேவரைட்ஸ் லிஸ்ட் தயாராகிவிடும். 

ஏஐ படிப்புகளில்  சேருபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரிப்பு!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஏஐ (AI-Artificial Intelligence) மற்றும் எம்.எல் (ML-Machine Learning) படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பிற்கான இணையதள நிறுவனம் ‘ஃபவுண்ட்இட்’ நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஏஐ மற்றும் எம்.எல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வின்படி, கடந்த ஆண்டை விட ஏ.ஐ மற்றும் எம்.எல் படிப்புகள் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  அதேபோல், இந்த படிப்புகளை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேருபவர்கள் சராசரி குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.7.8 லட்சமும், சராசரி அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.10.3 லட்சமும் சம்பளம் பெறுகின்றனர்.

சிரிக்கும் ரோபோ!

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள், ரோபோவின் முகத்தில் உயிருள்ள திசுக்களைப் பொருத்தி அதனை சிரிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில், ஷோஜி டேகுச்சி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், முக வடிவில் மனித தோல் செல்கள் மூலம் திசுக்களை ஆய்வகத்தில் வளர்த்து, அதனை ரோபோ ஒன்றுக்குப் பொருத்தி, அதனை சிரிக்க வைத்துள்ளனர்.   மூளை மற்றும் தசைகளின் ஆற்றல் திறன் முதல் தோலின் செல்கள் தன்னைத்தானே சரிசெய்யும் திறன் கொண்டிருப்பதால் உயிருள்ள திசு, உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் ஷோஜி டேகுச்சி தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் சுற்றோட்டத் தொகுதி மற்றும் நரம்புகள் போன்ற கூடுதல் கூறுகளை இணைத்து, ஆய்வகத்தில் வளர்க்கப்படும் தோலை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது மிகவும் யதார்த்தமான ரோபோவை உருவாக்கி அதனை செயல்பட வைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.