districts

img

களைகட்டிய எருது விடும் விழா

கிருஷ்ணகிரி, ஜன. 16- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் எருது விடும் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருது விடும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சாலையின் இருபுறமும் கம்புகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புகளுக்கு நடுவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் சீறி பாய்ந்தபடி வந்தன. 300க்கும் மேற்பட்ட மாடுகளை அதன் உரிமை யாளர்கள் அழைத்து வந்திருந்தனர். அதேபோல், திப்பனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கும்மனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. திப்பனப்பள்ளி, கும்மனூர், எண்ணேகொள், தாசிரிப் பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அவற்றை இளைஞர்கள் விரட்டி சென்றார்கள். இதில் சிறந்த காளை களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், சோமார்பேட்டை உள்ளிட்ட பகுதி களிலும், சூளகிரி சுற்றுவட்டார கிராமங்க ளிலும் எருது விடும் விழா நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.