districts

வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலம் இருவழிப்பாதையாக கட்டத்திட்டம்

சென்னை,ஜன.21- வியார்பாடி கணேசபுரத்தில்  ரயில்வே மேம்பாலம் கட்டப்படவேண்டும் என்று சட்டப்பேரவையில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அ.சவுந்தரராசன். எஸ்.கே. மகேந்திரன் ஆகியோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர், மேலும் இந்த மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாலிபர் சங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதிக்குழுவும் பல மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சிக்கு வலியுறுத்தியதோடு போராட்டங்களும் நடத்தின.இதற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்துள்ளது, வடசென்னை வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன்  நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை  ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர் பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதையை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் கடந்து செல்ல முடியாத  அளவிற்கு இங்கு மழைநீர் தேங்கி நிற்பதால்  வாகன போக்குவரத்து தடைபடும். சென்னை மாநகராட்சி மூலமாக அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.142 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மேம்பாலம் கட்டுமான பணியை தொடங்க உள்ளது. முழுக்க முழுக்க மாநகராட்சி நிதியின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  கணேசபுரம் ரயில்வே மேம்பாலம் புதிய தொழில் நுட்பத்தில் சென்னை ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் கட்டப்படு கிறது. இந்த மேம்பாலம் 15.2 மீட்டர் அகலத்திலும் 600 மீட்டர் நீளத்திலும் கட்டப்படுகிறது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் இருந்து செல்லும்போது 2 வழியாகவும் வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு வரும்போது 2 வழியாகவும் மொத்தம் 4 வழி பாதையாக இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ஆடு தொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் தொடங்கி ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து பெட்ரோல் பங்க் வரை கட்டப்படுகிறது.