செங்கல்பட்டு, ஜன. 30- தமிழ்நாடு முழுவதும் 5 வாரங்களுக்கு மேல் பாக்கி யுள்ள 1056 கோடிரூபாய் கூலி தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டுமாவட்டம் சித்தாமூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்குளத்தூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சண்முகம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் என்.அருணாச்சலம், வி.தமிழரசி ஆகியோர் பேசினர். திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் நிர்வாகி து.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.குமார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விதொச மாவட்டச் செயலாளர் கா.புருஷோத்தமன், மாவட்ட துணைத்தலைவர் எம்.குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.