கடலூர், ஏப்.2- கடலூர் மக்களவைத் தொகுதி யில் திமுக கூட்டணி சார்பில் காங்கி ரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு மணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். பண்ருட்டியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் விஷ்ணு பிரசாத், என்னுடைய மாம னாக பாமக தலைவர் அன்புமணி ராம தாஸ் இருந்தாலும் உறவுகள் வேறு அரசியல் கொள்கை வேறு, 15 வருடங்களாக தொடர் போராட்டங்களுக்காக கொள்கை களால் அமைக்கப்பட்ட கூட்டணி இது. மகாபாரதத்தில் பாண்டவர்க ளுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற போர், இதில் தர்மம் வெற்றி பெற்றது பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நாங்கள் கொள்கைக்காக கூடிய பாண்டவர் அணி என்று தெரிவித்தார். பாமகவிற்கு கொள்கைகள் இல்லை என்று கூறிய அவர், இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 6 மாதத்திற்கு முன்பு என்எல்சிக்கு எதிராக பாமகவினர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அப்பொழுது இந்த என்எல்சி நிறு வனம் யாருடைய கையில் உள்ளது. அவர்களிடமே தற்போது கூட்டணி வைத்து கொண்டு எப்படி சென்று அங்கு ஓட்டு கேட்பீர்கள்?. அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டணி மூலம் உங்க ளுக்கு ராஜ்யசபா பதவி கிடைத்தது. ஆனால் தற்போது கூட்டணி இல்லை என்று கூறி கூட்டணியை விட்டு வெளியில் வந்தவுடன் எம்பி பதவியை தூக்கி எறிய வேண்டாமா? விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் பதவியை அந்த கூட்டணியை விட்டு வெளியில் வந்தவுடன் ராஜினாமா செய்தார். அவர் தான் தன்மானத் தலைவர் என்று குறிபிட்ட வேட்பாளர் விஷ்ணு பிரசாத் இதுதான் சரியான பாதை என்று அவர் தெரிவித்தார். செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வே. கணேசன், கூட்டணி கட்சித் தலைவர்கள் கோ.மாதவன், என்.ராமலிங்கம், திருமாவளவன், ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.