districts

img

பெண்களை அவதூறாக பேசிய வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் ஆவேசப் போராட்டம்

திருவள்ளூர், ஜன.18- கும்மிடிப்பூண்டி அருகே கும்புளி கிராம வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற பெண்களை அவதூறாக பேசிய வனத்துறை அதிகாரிகளுக்கு கண்ட னம் தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளி யன்று (ஜன. 17) சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சி கும்பலி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான ஏழை,  எளிய மக்கள் கால்நடைகளை வளர்ப்பது மற்றும் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தை ஒட்டி பல ஏக்கர் கணக்கில் காப்புக்காடு உள்ளது. இந்த காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக செடிகள் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வழக்கம்போல் கும்புளி கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் செடி கொடிகளை மேய்ந்து விடுதாக கூறி இரண்டு பெண்களை தகாதவார்த்தைகளால் பேசி யுள்ளனர்.  இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், வயல் வெளியில் களை எடுத்துக் கொண்டிருந்த முதியவர் குண சேகரன்(61), அருண்(62) ஆகியோர் அந்த வனத்துறை அதிகாரியிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது இருவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து மாதர்பாக்கம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.  இந்த தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பளி செல்லும் சாலையை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆரம்பாக்கம் காவல்துறை உயர்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டக்காரரி டம் பேச்சுவார்த்தை நடத்திய போது நாங்கள் காலங்காலமாக கால்நடைகளை வனப்பகுதி மற்றும் விவசாயப் பகுதிகளில் மேய்ப்பது வழக்கம் நாங்கள் முக்கிய செடி, கொடிகளை நாசப்படுத்தவில்லை என எடுத்து கூறினார். அதற்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ நட வடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர்,  கூட்டம் கலைந்து சென்றது.