districts

img

கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

வேலூர், அக். 12- தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சங்கத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திரு வண்ணாமலை மாவட்டங்கள் இணைந்த மண்டலத்தின் சார்பாக கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.வி.எல்.எஸ்-க்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களில் கால்நடை ஆய்வாளர் பணியிடத்தை தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேலூர் மாவட்டச் செயலாளர் சா.ராஜன் தலைமையில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் ஆர்.பழனி வேல் (திருவண்ணாமலை), எம்.ராஜசேகர் (ராணிப்பேட்டை), டி. ஜெயக்குமார் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.சேகர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சி.சாரங்கபாணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.