வேலூர், டிச.6- மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திலிருந்து 132 தூய்மைப் பணி யாளர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டங்க ளில் கனமழை பெய்தது. ஆனால், இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சிய ளித்தது. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலை கள், தெருக்கள், பூங்காக்கள், பேருந்து நிலை யங்கள் என ஆங்காங்கே பொது இடங்கள் அனைத்தி லும் கழிவுகளும், குப்பை களும் தேங்கிக் கிடக் கின்றன. இதனால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுத்து, தூய்மைப் பணிகள் மேற் கொள்ள பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் ஒன்றியத்திலிருந்து 20 தூய்மைப் பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்டம், வானகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞான சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, சுதாகர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அதே போன்று அணைக்கட்டு ஒன்றி யத்தில் இருந்து நிவாரண பணிகளுக்கு ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள் புறப்பட்டு சென்றனர்.