வேலூர், பிப்.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி சிறப்பு பேரவை மற்றும் நிதியளிப்பு கூட்டம் வேலூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வேலூர் வடக்கு, தெற்கு தாலுகா, காட்பாடி மற்றும் மத்திய தர அரங்கங்கள் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பரசு ராமன் தலைமையில் நடைபெற்றது. இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.சுடரொளியன், கே.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தனர். பேரவையை மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி துவக்கி வைத்து பேசி னார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதியிடம் நிதி வழங்கப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய மூன்று இடங்களிலும் சேர்த்து மாநாட்டு நிதியாக ரூ.3,70,761 நிதியாக வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சிக்குடும்பத்தின் குழந்தைகள் நீல்அரவிந்த், துரை அமுதன் ரூ.2503 மற்றும் சங்கமி ரூ.881ஆகியோர் அகில இந்திய மாநாட்டுக்கு தங்களது உண்டியல் சேமிப்பு நிதியினை பால பாரதியிடம் வழங்கினர். இதே போன்று திருப்பத்தூரில் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தயாநிதி, செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எம்.கோவிந்தராஜ், எஸ்.சுரேந்திரன், எம்.கணேஷ், பெ.திலீபன், பி.காத்தவராயன், எஸ்.ஜோதி, எம்.இந்து மதி, வ.அருள்சீனிவாசன், வாணியம்பாடி தாலுகா செயலாளர் ஏ.பிச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.