districts

img

எரியாத மின் விளக்குகள்: கொசப்பாடியில் தீ பந்த போராட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.6- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கொசப்பாடி கிராமத்தில் ஒரு மாத காலமாக தெரு மின் விளக்குகள் எரிய வில்லை. 6வது மற்றும் 8வது வார்டு கள் முழுமையாக இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தினர்.