districts

img

ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்கள் விரைவில் வழங்க நடவடிக்கை

சென்னை, ஜன. 23 - மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பட்டினப்பாக்கம் பணிமனையை செவ்வாயன்று (ஜன.23)  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து  வைத்தார். மேலும், பணியின் போது  உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர் கள் 16 பேருக்கு பணி நியமன ஆணை களை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், பணியின் போது உயிரிழந்த பணியாளர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநருடன் நடத்துநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்தையில் பே-மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆயிரத்து 666 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதில் முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி  உதவியுடன் 2 ஆயிரத்து 213 புதிய பேருந்து கள் வாங்கப்பட உள்ளன என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் தமிழச்சி தங்கபாண்டி யன் எம்.பி.,, த.வேலு எம்எல்ஏ, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.