வேலூர், நவ. 25 - “இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ’’ என்ற தலைப்பில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் சென்னை நடைபெறும் பெருந்திரள் அமர்வு கோரிக்கை விளக்க பிரச்சாரக் கூட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் துவங்கி பெரிய தெரு, வேளாளர் தெரு, நேதாஜி நகர் வழியாக ஆர்டிஓ சாலையில் நிறைவடைந்தது. பின்னர் தெருமுனை பிரச்சாரக் கூட்ட மாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி பரசுராமன், ஐஎன்டியுசி நிர்வாகி ஏகாம்பரம், ஏஐசிசிடியு நிர்வாகி ஏ.ஏழுமலை ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் எம்.பி.ராமச்சந்திரன், எச்எம்எஸ் மாநில செயலாளர் கா.வெ.திருப்பதி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒன்றிய மோடி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 25ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், திருத்தப்பட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதா 2022 திரும்ப பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்களாக வேலை வழங்கி நாள் ஒன்றுக்கு 600 ஊதியம் வழங்க வேண்டும், விவசாயி களின் விளை பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், விதை உரம் மற்றும் மின்சாரத்திற்கான மானியத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.