districts

img

பெருங்குடி குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஏப். 29 - பெருங்குடி குப்பை கிடங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலி யுறுத்தி வெள்ளியன்று (ஏப்.29) கிடங்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருங்குடி குப்பை கிடக்கு சுமார் 340 ஏக்கர் பரப் பளவில் உள்ளது. மாநக ராட்சியின் 9 முதல் 15  வரையிலான 7 மண்ட லங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப் படுகிறது. இந்த கிடங்கின் பரப்பளவு ஆண்டுதோறும் சுமார் 10 ஏக்கர் அதிகரித்து வருகிறது. திடக்கழிவுகளை கையாளும் வழிகாட்டு தலுக்கு மாறாக கிடங்கில் குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பைகளோடு தொழிற் சாலை கழிவுகள், மருத்துவ  கழிவுகளையும் கொட்டு கின்றனர். இவற்றிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுக் கள், வெப்பத்தின் காரணமாக தீ பிடித்து எரிகின்றன. இந்த தீயை அணைக்க கடந்த 3  நாட்களாக 300க்கும் மேற் பட்ட ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை தடுக்கவும், குப்பை கிடங்கு பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண வும் வலியுறுத்தி சோழிங் கநல்லூர் பகுதிக்குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் கூறியதாவது: குப்பை கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்தால் எழுந்த புகை  பல கிலோ மீட்டர் சுற்றள விற்கு பரவி உள்ளது.  இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மூச்சு திணறல்,  தெளிவாக பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் புற்று நோயை உருவாக்கும் காரணிகள் உள்ளன. இதுபோன்ற தீ விபத்து பல பத்தாண்டுகளாக நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை இல்லை. இதனை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துறை, அரசும் இணைந்து செய்ய வேண்டும்.

சென்னை நகரின் சரி பாதை குப்பைகள் பெருங் குடியில் கொட்டப்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து  கொட்டுவதாக அறிவிக் கிறார்கள். அதை அமல்படுத்துவதில்லை. அதன் காரணமாவே பிளாஸ்டிக், இரும்பு, உப்பு நிறைந்த பொருட்கள், அங்கக் பொருட்களில் இருந்து உருவாகும் மீத் தேன் வாயு வெப்பத்தின் காரணமாக பற்றி எரிகிறது. நகர் முழுவதும் சேரும் குப் பைகளை பிரிப்பது, மறு  சுழற்சி செய்வது என  இரண்டையும் செய்ய  வேண்டும். அதை செய்யா ததன் விளைவாகத்தான் இதுபோன்ற விபத்து நிகழ்கிறது. சதுப்பு நிலத்தில் 15 ஏக்கர் பரப்பில் குப்பை கொட்ட தொடங்கினர். தற்போது குப்பை கிடங்கு 340 ஏக்கராக விரிந்துள்ளது. பலலட்சம் கியூபிக் மீட்டர் குப்பை அடர்த்தி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுகள் மூலமும் நோய் பரவும். விஞ்ஞான ரீதியாக குப்பை பிரச்சனைக்கு தீர்வு  காண வேண்டும். பரப் பளவை குறைத்து, மறு சுழற்சி செய்ய ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். இந்தப் போராட்டத் திற்கு கட்சியின் சோழிங்க நல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் கே.வனஜகுமாரி, சுந்தர், வேளச்சேரி பகுதிச் செயலாளர் முகமது ரஃபி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் மோகன் உள்ளிட்டோர் பேசினர்.