districts

img

நகராட்சி மைதானத்தை மீட்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் பேரணி

ராணிப்பேட்டை, ஜூலை. 14 -  

    ராணிப்பேட்டை நகராட்சி காரை கிராமத்தில் மக்கள் பயன்படுத்தி வந்த மைதானத்தை மீட்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எ. குண்டா (எ) சார்லஸ் தலைமையில் வெள்ளியன்று (ஜூலை. 14) பேரணியுடன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

     இதில் நகர மன்ற துணைத் தலைவர் சீமா. ரமேஷ் கர்ணா, சோ. தமிழ், மாந்தாங்கல் ராஜா, சிப்காட் சந்திரன், சசிகுமார், பெல். கி. சேகர், ம. ராமச்சந்திரன், நரேஷ், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் காரை கிராமத்தில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் காரை பகுதியில் ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த மைதானத்தை கிராமத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இங்கு விளையாட்டு, திருவிழாக்கள் நடத்துவது போன்ற பெரிய பகுதியாகும்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதி யில் பல ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வந்த மைதான நிலத்தை மாவட்ட நிர்வாகம் காவலர் குடியிருப்பு கட்ட இருப்பதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் காரை கூட்டு ரோட்டில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் வரை பேரணியாக சென்று மனு அளிக்கப்பட்டது.

    அந்த இடத்தில் காவல் குடியிருப்பு கட்ட இருப்பை மாவட்ட நிர்வாகம் கைவிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா, நவீன முறையில் சமுதாய கூடம், ரேஷன், மருத்துவமனை, நூலகம், தபால் அஞ்சல் துறை அமைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் என். சுரேஷிடம் நேரில் மனு அளித்து வலி யுறுத்தப்பட்டது.