சிதம்பரம் அருகே செங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் ரவி உள்ளிட்ட சந்தித்து நலம் விசாரித்தனர்.