சென்னை, ஜன. 9- பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றி யூர் மண்டலம் 4ஆவது வார்டில் உள்ள அனைத்து நகர்களின் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் முரு கப்பா நகர் தலைவர் சொக் கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சண்முகபுரம், டி.எஸ். கோபால்நகர் மேற்கு, கிழக்கு, ஜோதிநகர், ராம நாதபுரம், முருகப்பாநகர், ெஜய்`ஹிந்த்நகர், முல்லை நகர், மகாலஷ்மிநகர், பாலாஜிநகர், காமராஜ்நா கர், பிருந்தாவன்நகர், நேதாஜிநகர், காந்திநகர், பஜனைகோயில்தெரு, எர்ணீஸ்வரர்நகர் திருவீதி யம்மன்நகர் போன்ற 20 நகர்நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி களுக்கு 74ஆவது அரசி யல் திருத்த சட்டம் வழங்கும் அதிகாரங்கள், 18 கடமை கள் தமிழ்நாட்டில் நடை முறைப்படுத்தும் விதம் குறித்து மாமன்ற உறுப்பி னர் அறிக்கை முன்வைத் தார். மேலும் கடந்த 10 மாதங்களில் நடைபெற்ற பணிகள், நடைமுறைப் படுத்த இயலாத கோரிக்கை கள் குறித்தும் விளக்கினார். ரூ 52 லட்சம் மதிப்பீட்டில் மகாலஷ்மி நகர் பிரதான சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மேலும் 86 தெருக்கள், தார்சாலை களாக சிமெண்ட் சாலை களாக அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர் நிதி ரூ35 லட்சத்தில் குழந்தை கள் விளையாட்டு திடல் அமைப்பது உள்ளிட்ட தற் போது நடைபெற்று வரும் பணிகளை ஜெயராமன் எடுத்துரைத்தார். நகர்நலச்சங்க நிர்வாகி கள் பேசுகையில், குடிநீர், கழிவுநீரகற்றல், தெரு விளக்கு, சாலைகள் அமைத் தல், மின்சார மேல்நிலை வயர்களை புதைவடமாக மாற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைத்தல், தினசரி தூய்மைப் பணி நடைபெறு வதை உறுதிப்படுத்துதல் போன்ற பல கோரிக்கை களை வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்து பேசிய ஆர்.ெஜயராமன், அரசு அதிகாரிகள் பணி களை மேற்கொள்வதில் கவ னமின்மை உள்ளது. போது மான ஊழியர்கள் இல்லை.
உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிதி வழங்குவதை குறைக்க வேண்டும் என்று உலகவங்கி நிர்பந்திக்கிறது. உலகவங்கியின் நிபந்த னையை நடைமுறைப் படுத்த சொத்துவரி, சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டும். அபராதங்கள் விதிக்க வேண்டும். அப் போதுதான் ஒன்றிய அரசு உள்ளாட்சி அமைப்பு களுக்கு நிதிவழங்கப்படும் என ஒன்றிய அரசு நிபந் தனை விதித்துள்ளது. இதனால் சொத்து வரியை மாநில அரசு உயர்த்தியது என்றார். கொசுபுழு வீட்டில் உற்பத்தியாகிறது என்று அபராதம் விதிப்பது, அங்கீ காரம் இல்லாத கட்டி டங்களை இடிப்போம் என மிரட்டி பணம் பறிப்பது, தெருவில் குப்பை கொட்டி னால் அபராதம், கட்டிடக் கழிவு கொட்டினால்ரூ5000 வரை அபராதம் விதிக்கப் படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து நகர்நலச் சங்கங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப் பட்டது. நலச்சங்க கூட்ட மைப்பின் அமைப்பாளராக மாமன்ற உறுப்பினர் ஜெய ராமன் தேர்வு செய்யப் பட்டார். இக்கூட்டத்தில் சிபிஎம் பகுதி செயலாளர் கதிர் வேல், நிர்வாகிகள் ஆர்.கரு ணாநிதி, வெங்கட்டையா, அலமேலு உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.