திருவண்ணாமலை,ஜன.24- கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகி யோர், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தனர்.