கடலூர், ஏப்.20- கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளி கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்குப்பதிவு செய்து முடிக்க இரவு 9 மணியை தாண்டியது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு கொண்டுவரப் பட்டது. வாக்கு எண்ணிக்கை மையமான இந்த கலைக்கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகிலேயே அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உரிய பாது காப்பு அறை அமைக்கப்பட்டு இருந்தது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான 1509 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 6 இடங்களில் உள்ள பாதுகாப்புஅறையில் வைக்கப்பட்டு அந்த அறை வேட்பாளர் களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வை யாளர் முன்னிலையில் கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் சீல் வைத்தார். இந்த வாக்குப்பதிவு மையத்தை சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கு மத்திய துணை ராணுவ படையினர் ஆயுதத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் பேட்டி இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் மக்களவைத் தொகுதியில் 1509 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவுகள் நடை பெற்ற வாக்கு பதிவு எந்திரங்களை பாது காப்பாக கொண்டுவரப்பட்டது. பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூமில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தினந்தோறும் சம்பந்தப்பட்ட அறைகளை நேரில் பார்வையிடலாம். மேலும் அவர்களுக்கென தனி அறைகள் ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் 6 அறைகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. இது மட்டுமின்றி 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் துணை ராணுவப் படையினர் ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 72.28 விழுக்காடு வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது. தமிழகம் முழுவதும் கடும் வெயில் காரணமாக 4 முதல் 5 விழுக்காடு வாக்குப்பதிவு குறைந் துள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் சுமூகமான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றதால் எந்த பகுதிகளுக்கும் மீண்டும் வாக்கு பதிவு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.