இந்தியா கூட்டணியின் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு புதனன்று (ஏப்.3) திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திமுக காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி எம்எல்ஏ, திரிசூலம் ஊராட்சி தலைவர் மாரிச்சாமி, சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.