பதவிக்காகவும் பணத் திற்காகவும் அடித்துக் கொள்கிறார்கள் புதுச்சேரியில் பதவிக்காக வும் பணத்திற்காக ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் நடை பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் அலை பேசியில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர் நமச்சிவாயம் குறித்து மிகக் கடுமையாக பேசியிருந்தார். ஆளும் என்.ஆர் காங்கி ரஸ் - பாஜக கூட்டணி அரசாங்கம் ஊழலிலும் லஞ்சத்திலும் திளைப்பதாக வும் முதலமைச்சரும் பாஜகவை சேர்நத உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் புதுச்சேரி மக்களுக்கான நலத்திட்டங்களை எதையும் செயல்படுத்துவது இல்லை என்றும் மாறாக தங்களது வருமானத்தை மட்டுமே கவனித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். அதிருப்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களோடு துணைநிலை ஆளுநரை சந்தித்து தங்களுக்கும் அமைச்சர் பதவி அல்லது வாரியத் தலை வர்கள் பதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அங்காளன் எம்எல்ஏ கூறி யுள்ளார். அதேபோல், போகிற போக்கில் பாஜக நியமன சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கத் தையும் செய்தியாளர்களிடம் போட்டு கொடுத்துள்ளார். வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து மனைகளாக பிரித்து விற்பனை செய்வதாக ஏற்கெனவே ‘ சப்தகிரி’ ராமலிங்கம் மீது புகார் எழுந்தது. துணைநிலை ஆளுநரை சந்திக்கும் போது, தான் வரவில்லை என்று கூறியதாக வும் , வந்தால் கண்ணகி பள்ளி நிலம் சம்பந்த மாக தன்னை வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று பயந்து அதிருப்தி எம்எல்ஏக்க ளுடன் வரவில்லை என்று ராமலிங்கம் கூறியதாகவும் அங்காளன் தெரிவித்துள் ளார். அப்படியென்றால், கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சொந்த மான அரசு நிலத்தை பாஜக எம்எல்ஏ ராமலிங்கம் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்தது இதன் மூலம் உறுதி யாகியுள்ளது. இவர்களுக்குள் பதவி மற்றும் ஊழலை பங்கிடுவதில் நடை பெறும் சண்டையில் ஒருவர் செய்த தவறை மற்றவர் போட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். - நா.பிரபுராஜ்