98 வது வட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் இல்லை. இதனால், பொதுமக்களிடம் புகார் பெறவும், துரித நடவடிக்கை எடுக்கவும் இயலாத நிலை உள்ளது. எனவே, நிரந்தரமாக உதவி பொறியாளரை நியமிக்க வலியுறுத்தி, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணை தலைமை பொறியாளரிடம், 98 வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி மனு அளித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், சி. மார்ட்டின், ஏ.டில்லிபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.