districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி மயான பாதை பிரச்சனைக்கு தீர்வு

சேலம், ஜன.7- மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவேசமிகு போராட்டத்தின் காரணமாக நூறு ஆண்டு கால மயான பாதை பிரச்ச னைக்கு தீர்வு எட்டப்பட்டது. சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகா, தும்பிபாடி ஊராட்சிக் குட்பட்ட கண்ட பிராயன் வளவு, போயர் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், சடலங்களை  தோளில் தூக்கிச்சென்றே அடக்கம் செய்யும்  அவலநிலை நீடித்து வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அனைத்து அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும் எவ்வித உரிய தீர்வும் எட்டப்பட வில்லை. மேலும், இப்பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல் லும் வகையில் அண்மையில் மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் காடை யாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதன் பின்னரும் அரசு நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவ ரின் மனைவி மேனகா, உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடலை எடுத்துச் செல்ல பாதை இல் லாததால் ஊர் பொதுமக்கள், மார்க் சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் முருகன் தலைமையில் வியாழ னன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேக ரன், ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ் வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பாதை அமைக்கப்பட உள்ள இடம் கூட்டு பட்டாவில் இருப்பதால், தற் போது பாதையை ஏற்படுத்தி தர முடி யாது என தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த போராட்டகாரர்கள் அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை எனக்கூறி தாங்களாகவே பாதை அமைக்க முற்பட்டனர். அப்போது, காடையாம்பட்டி காவல் ஆய்வாளர்  ஆனந்தகுமார், போராட்டக்காரர் களை பார்த்து மிரட்டல் விடுக்கும்  தொனியில் பேசினார். இதனால் மேலும் ஆவேசமடைந்த பொதுமக்கள், பாதை அமைத்து தராவிட்டால் சடலத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விடுவோம் என எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வேறு வழி யின்றி காவல் துறையும், வருவாய்த்  துறையும் சம்பந்தப்பட்ட நில உரிமை யாளரிடம் பேசி பாதையை அமைக்க முன்வந்தனர். இதன்பின்னர் உதவி வட்டாட்சியர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஜேசிபி இயந்தி ரம் மூலம் 10 அடி அகல சாலை அமைத் தனர். இதையடுத்து உயிரிழந்த பெண் ணின்  உடல் செங்கொடி ஏந்திய வாக னத்தில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வ லம் நடைபெற்றது. அப்போது, தங்க ளுக்கு பாதை அமைத்து கொடுக்க துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.