திருவள்ளூர், செப். 25 – திருவள்ளூர் நகராட்சி யில் மொத்தம் 27 வார்டு களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 13 வது வார்டைச் சேர்ந்த பாரதி நகர், ஏ.ஆர். கே.நகர். மற்றும் கனக வள்ளித்தாயார் அவென்யூ பகுதிகளில் வசிக்கும் மக்கள், மற்றும் 12 வது வார்டு பகுதியைச் சேர்ந்த திருமலை நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு இதுவரை நகராட்சியினால் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மக்கள் தனியார் ஆழ்துளை கிணறு களை நம்பியே கடந்த 10 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஜெயா நகரை புங்கத்தூர் பகுதியோடு இணைக்கும் ஏ.ஆர்.கே.நகர். கனக வள்ளிதாயார் அவென்யூ சாலை பாதாள சாக்கடைக் காகவும், குடிநீர் குழாய் கள் பொருத்த அச்சாலை யில் பள்ளங்கள் தோண்டப் பட்டது. வேலை முடித்த பிறகும், சாலையை சீரமைக் கவில்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கா மல் காலதாமதம் செய்து வருகின்றனர். சாலையில் குழாய்கள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கா மல் கடந்த 6 மாதங்களாக கண்டுகொள்ளாமல் உள்ளதால் எல்லாம் மரண குழிகளாக மாறியுள்ளது. சாலையில், வாகன ஓட்டி கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு லாக்கற்ற சாலை யாக தற்போது மாறி யுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சாலை வழியாக தான், ஏ.எஸ்.பி.நகர்,சேலை மெட்ரோ வாட்டர் பகுதியில் வசிக்கும் மக்கள், பாரதி நகர் விரிவாக்கம் மற்றம் திருமலை நகரில் வசித்து வருகின்ற ஆயிரக்கணக் கான மக்கள் ரயில் நிலை யம், அரசு மருத்துவ மனைக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். இங்கு சாலை மற்றும் குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அனுப்பியும் இதுவரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் எம்.ஜம்பு கூறியதாவது. வீட்டு வரியை வசூலிக்க தெரிந்த நகராட்சிக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. குடிநீர் வசதி, சாலை வசதிகள் இன்றிய மையாத ஒன்றாகும். அவசி யம், அவசரம் கருதி பழு தடைந்துள்ள சாலைகளை சீரமைக்க திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடு களுக்கு குடிநீர் இணைப்பு கள் விரைந்து வழங்க வேண்டும். தெருக்களில் பொது குழாய்கள் அமைத்து குடிநீர் வசதியை பொது மக்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார். - பெ.ரூபன்