districts

img

குடியிருப்பில் தேங்கும் கழிவு நீர்: தொற்று ஏற்படும் அபாயம்!

 செங்கல்பட்டு, ஆக.9- செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் மற்றும் ஆலப் பாக்கம் ஆகிய ஊராட்சிக்கு இடையிலான 8,9,10,11 ஆகிய வார்டுகளில் மொத்தம் 11 தெருக்கள் உள்ளன. இதில் ஒரு தனி யார் பள்ளியும் செயல்பட்டு  வருகிறது. மேலும் இப்பகுதி யில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு முறையான வடி கால்வாய் வசதி இல்லாத தால், பெரும்பாலான சாலை களில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் உள்ளது. சாலையில் கழிவுநீர் நாள் கணக்கில் தேங்கு வதால் கடும் துர்நாற்றம் வீசு வதுடன், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால், அப்பகுதியினர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தங்களது வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்திருப்பதால் குடிதண்ணீர் கூட நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “மழை நீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதி கள் இல்லாததால், ஆண்டு தோரும் இங்குள்ள தெருக் களில் 8 மாதங்கள் வரை தண்ணீரில் கழிவுநீர் தேங்கி  நிற்கிறது. கடந்த சில  நாட்களாக மழை பெய்வ தால், 2 அடி வரை தண்ணீர்  சாலையில் தேங்கியுள்ளது” என்றனர். கொசு உற்பத்தி மிகுதி யாகி, இங்கு வசிப்போர் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கையில் ஷூ, சீருடை கழிவு நீரில் நனைந்து வரு கிறது. இதனால் மாணவர் கள் சரும நோய் உள்ளிட்ட உடல் பாதைக்கு ஆளாகி வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சீரமைத்து மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலை வர் சக்தி நகர் குடியிருப் போர் சங்கத்தின் செய லாளருமான அழகேசன், “அரசு அனுமதி பெற்ற வீட்டு  மனை பிரிவுகள் என்பதால் பலரும் குடியிருக்க மனை கள் வாங்கி வீடு கட்டி யுள்ளார். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித அடிப் படை வசதிகளும் செய்து கொடுக்காததால் தற்போது மழைநீரும் கழிவு நீரும் கலந்து சாலையில் தெப்ப மாக தேங்கி நிற்கிறது. இதனால் நாங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகி றோம்.  மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத் திலும் பலமுறை முறை யிட்டும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சக்தி நகர் மக்களை திரட்டி சாலை மறி யல் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம்” என்றார். - க.பார்த்திபன்