districts

வீட்டுக்கு தீ வைத்தவர் கைது

கடலூர், மே 13- கடலூர் அடுத்த காரைக்காட்டை சேர்ந்தவர் ஜெயக் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்  என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலை யில் சம்பவத்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாகக்  கூறப்படுகிறது. இதில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.