districts

img

தூர்வாரப்படாத வாய்க்காலுக்கு பணம் எடுத்த அதிகாரி!

கடலூர், ஜன. 20- வாய்க்கால் தூர் வாராமலேயே தூர் வாரியதாக முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் பாலூர் முதல் சித்தரசூர் வழியாகச் செல்லும் சங்கிலி வாய்க்கால் தூர்வாருப்படா மலேயே தூர் வாரியதாக முறை கேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அரசு ஆதிதிராவிடர் மாண வர்கள் பள்ளிக்கு செல்லும் பாதையை சிமென்ட் சாலையாக அமைக்க வேண்டும், ஆதிதிராவிடர் சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி அத்து கல் போட்டு வழங்க வேண்டும், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.வேலு, ஆர்.வெங்கடேசன் ஆகி யோர் தலைமை தாங்கினார்கள். மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், பகுதிக்குழு செயலாளர் nஜயபாண்டியன், பகுதிக் குழு உறுப்பினர்கள் சுந்தரபாண்டியன், பெருமாள், வெங்கடேசன், ஸ்டீபன்ராஜ், ஜென்மாரக்கினி, ரேவதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.