விழுப்புரம்,ஜன.7- வானூர் அருகே சேரும் சகதியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து கொஞ்சு மங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொஞ்சுமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பழைய கொஞ்சு மங்களம். இந்த கிராமத்தில் உள்ள தெருக்கள் சேரும் சகதியு மாக மக்கள் நடமாட முடியாமல் உள்ளது. இசை சாலைகளை சீரமைக்க வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. அர்ச்சுனன், வட்டச் செய லாளர் வி. சுந்தரமூர்த்தி, சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.