திருவண்ணாமலை, அக். 13- இருளர் இன மக்களிடம் ஆக்கிரமிக்கப் பட்ட சுடுகாட்டு நிலத்தை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டத்தில் சாலவேடு கிராமம் மேட்டுப்பாளையம் இருளர் காலனியில் 30க்கும் மேற்பட்ட குடும்பம் வசிக்கிறது. இந்த மக்களுக்கு தனியாக ஒதுக்கப் பட்டிருந்த சுடுகாட்டு நிலத்தை அப்பகுதி யில் வசிக்கும் மாற்று சமூகத்தினர் ஆக்கிர மிப்பு செய்து விவசாயம் செய்து வரு கின்றனர். கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வந்த சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்துள்ளார் கள் இடமிருந்து மீட்டு அதே இடத்தில் சுடு காடு அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் மாரிமுத்து, சிபிஎம் வட்டாரச் செய லாளர் அப்துல் காதர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்தவாசி வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.