கடலூர், அக்.20- மார்க்சிஸ்ட் கட்சியின் குறிஞ்சிப் பாடி ஒன்றிய 10 வது மாநாடு குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சிவகாமி ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கே.சரவணன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மணி வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ்பாபு பேசினார். ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி வேலை அறிக்கையையும், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார்.நகர அமைப்பு செயலாளர் வி. மணிவண்ணன் நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 15 பேர் கொண்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழுவிற்கு செயலாளராக எம்.பி. தண்டபாணி தேர்வு செய்யப்பட்டார். குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து வடலூர் நகரத்தை பிரித்து 11 பேர் கொண்ட வடலூர் நகர குழு தேர்வு செய்யப்பட்டு புதிய நகர செயலாளராக ஆர்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் குறிஞ்சிப்பாடியில் தாலுகா மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை தற்போது உள்ள இடத்தை மாற்றி நகரத்தின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தின் மூலம் ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும், அனைத்து நாட்களிலும் தட்டுப்பாடின்றி வழங்க் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.