districts

img

டி.பி.ஜெயின் கல்லூரியை கையகப்படுத்த வேண்டும்

சென்னை, செப். 27 - டி.பி.ஜெயின் கல்லூ ரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை துரைப் பாக்கத்தில் டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பெறும் கல்லூரியாக தொடங்கப்பட்டது. பிறகு சுயநிதிப் பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. கொரோனா காலத்தில், அரசு உதவிப்பெறும் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் தவிர்த்தது. அதிக  கட்டணம் செலுத்தி படிக் கும் சுயநிதிப் பாடப்பிரிவில் மட்டுமே  மாணவர்களை நிரப்பியது. இதை எதிர்த்து மாண வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அரசு,  சிறப்பு அதிகாரியை நிய மித்து அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த நட வடிக்கை எடுத்தது. கல்லூரி நிர்வாகம் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி அதற்கு தடை பெற்றது. ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகளையும் கல்லூரி நிர்வாகம் தடுத்தது.  அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களை வெளியேற்றியது. இது தொடர்பாக ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு நிலு வையில் உள்ளது.

இதனால் உதவிபெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேராதது போன்ற தோற் றத்தை உருவாக்கி, ஆசி ரியர்கள் இல்லாத நிலையை  ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் வாயிலாக, அரசு உதவி  பெறும் 5 இளங்கலை மற்றும் 3 முதுகலை துறைகளை உயர்கல்வி துறையிடம் ஒப்படைப்பதற்கான தீர்ப்பை கல்லூரி நிர்வாகம் பெற்றுள்ளது. அரசு உதவிப்பெறும் பாடப்பிரிவில் ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் படிக்க மாணவர்கள் வரவில்லை என்று கூறும் நிர்வாகம், சுய நிதிப் பாடப்பரிவில் மட்டும் எப்படி பல ஆயிரம் கட்டி படிக்க முன்வந்தார்கள்? இந்த அம்சங்கள் அரசு தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச்  செல்லப்பட வில்லையா? அல்லது கல்லூரி நிர்வா கத்தின் விருப்பத்திற்கு தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள் ளதா? கல்லூரி செயல்படும் இடம் அரசுக்கு சொந்த மானது, அங்குள்ள கட்டிடங் கள் பல்கலைக்கழக மானி யக்குழு வழங்கிய நிதி யில் கட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும்  என்பதற்காக அரசு செய்தது. மாறாக, லாபம் சம்பாதிக்கும் சுயநிதிக் கல்லூரியை நடத்துவ தற்கு அல்ல. அரசு பாடப் பிரிவுகளை ஒப்படைக்கும் கல்லூரி நிர்வாகம், அரசு நிலத்தையும், கட்டிடங் களையும் அரசிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்று  நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்க  வேண்டும் என்பது சாமா னிய மக்களின் எதிர்பார்ப் பாகும். கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் இந்திய மாணவர் சங்கம்  இணைத்துக் கொண்டுள் ளது. இதனை அரசு நீதிபதி யின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதையே, மேற்கண்ட தீர்ப்பு காட்டுகிறது. எனவே,  இதில் அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை மாநகரில் இருந்த குடிசைப்பகுதி மக்களை கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகாமை யில் டி.பி.ஜெயின் கல்லூரி உள்ளது. மறுகுடியமர்வு செய்யப்படும் மக்களுக்கு உரிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமை. எனவே,  அண்ணாமலை பல்கலை கழகத்தை அரசு கையகப் படுத்தியதை போன்று டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசு கையகப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.