சென்னை, பிப். 4 - மாம்பலம் மழைநீர் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டுமான கழிவுகளை அகற்றும் செலவை, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்த தாரர்களிடம் இருந்து வசூலிக்குமாறு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத் தியது. தி.நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடிகால்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றிய போது, அதில் செல்லாமல் மீண்டும் வெளியேறியது. இதனால் குடியி ருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி யது. இதுதொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு வெள்ளி யன்று (பிப்.4) விசாரணைக்கு வந்தபோது, தண்ணீர் வடியாதது குறித்து மாநகராட்சி யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தி.நகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து மாம்பலம் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற வேண்டும்.
இந்த கால்வாயை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சி காலத்தில் 6 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப் பட்டது. ஒப்பந்ததாரர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக செய்ய வில்லை. சீரமைப்பு பணியின் போது சேர்ந்த கட்டிட கழிவுகளை, கால்வாய் அருகே ஆங்காங்கே கொட்டி வைத்திருந்தனர். இதனால் கால்வா யின் நீர் வழித்தடம் அடைத்து கொண்டது. இதனால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், கால்வாய் ஓரம் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.