மீன்பிடி தடை கால நிவாரணம்: முதல்வர் வழங்கினார்
புதுச்சேரி, ஜூன் 20- மீன்பிடி தடை கால நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 45 நாட்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 18,779 மீனவ குடும்பங் களுக்கு தலா ரூ. 6,500 வீதம் மொத்தம் ரூ.12 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 500 தொகையை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நிவாரண நிதி வழங்கும் துவக்க நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மீனவ மக்களுக்கு தடைக்கால நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குநர் முகமது இஸ்மாயில் உட்பட மீனவர்கள் திரளாக பங்கேற்றனர்.
நீர்நிலை புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்று இடம்
கடலூர் சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், ஜூன் 20- தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஜூன் 22 அன்று கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் கடலூர் சூரப்ப நாயக்கர் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருவரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளச்சாராயம் விற்பதை தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். இதற்கு உடந்தையாக உள்ள காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருந்த மக்கள் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் வீடுகளை இடித்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தப்பட்டனர் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கூட மாற்று இடம் வழங்கப்படவில்லை. சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு மாற்று இடம், கான்கிரீட் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ2.10 லட்சம் பறிமுதல்
வேலூர், ஜூன் 20 - வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் நெடுஞ்சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நிலம் மற்றும் வீட்டு மனைகள் தொடர்பாக அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதால் எப்போதும் கூட்டம் மிகுந்து காணப்படும். இங்கு சார்பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார். சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வ தற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர் விஜய் மற்றும் காவல்துறையினர் புதனன்று இரவு 7.30 மணியளவில் அதிரடியாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அலுவலகம் முழுவதும் உள்ள அறைகளில் பணம் ஏதேனும் உள்ளதா? முறைகேடான ஆவணங்கள் உள்ளதா? என்றும், எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நடத்திய சோதனையில் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ2.10 லட்சத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை சிறப்பு முகாம்
கடலூர்,ஜூன் 20 – கடலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையின் மூலம் திருநங்கைகளின் பல்வேறு தேவைகளுக்காக சிறப்பு முகாம்நடைபெறவுள்ளது.
அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய வற்றினை வழங்கிட ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூன் 21 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் தேவையான சான்றுகளை தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்துகொண்டு சிறப்பு முகாமில் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.