புதுச்சேரி, ஜன.7- என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் அலட்சியத்தால் மாஹே மக்களின் அடிப்படை பிரச்ச னைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலம் மாஹேவின் பொறுப்பாளர் காரைராஜன் ஞாயிற்றுகிழமை (ஜன.7) செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதுச்சேரியில் ஆட்சி நடத்திவரும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசால் மாஹி பகுதி மக்ககளின் மிக முக்கியமான கோரிக்கை கள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. குறிப்பாக மாஹே மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் மின் தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் காலிப்பணி டங்கள் நிரப்படவில்லை. மாஹே மருத்துவமனையில் மருத்துவர் காலி பணி யிடங்கள் உள்ளது. இறந்த வரின் பிரதேச பரிசோதனை செய்வதற்குகூட மருத்துவ வசதி இல்லாததால் அன்டை மாநிலமான கேரள மாநிலத்தின் தளச்சேரி மருத்துவமனைக்கு செல்லும் அவலம் உள்ளது. இது குறித்து பல முறை ஆட்சியாளர்கள் கவ னத்திற்கு கொண்டும் சென்றும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப் படவில்லை. அரசின் கல்வித்துறை யின் கீழ் இயங்கும் 50 ஆரம்ப பள்ளிகள் நடத்த 40 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 5 முதல் 12ம் வகுப்பு வரை அரபு மொழிக்கு ஒரே ஒரு ஆசி ரியர் மட்டுமே உள்ளார். உயர்நிலைப் பள்ளிப் பிரி வில் சமூக அறிவியல் பாடம் நடத்த போதிய ஆசி ரியர்கள் இல்லை. தொடர்ந்து அதிகரிக்கும் மின்கட்டணமும், மின்துறையை தனியார் மயமாக்குவதும், ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களும் மாஹி மக்களின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. பணியிடங்கள் அதிக அள வில் காலியாக உள்ள தால். இத்துறையிலும் பணிகள் தேக்க நிலையை நோக்கி நகர்கின்றன. என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடன் ரேஷன் கடை களை திறப்போம் என்று உறுதி அளித்தனர். மூன்று ஆண்டுகள் கடந்த பின்புமும் எந்த நட வடிக்கையும் இல்லாமல் இருக்கிறது. மாஹே மினி துறைமுகம் மற்றும் மருத்துவ அவசரகால கட்டு மானப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலேயே உள்ளது. இப்பிரச்சி னைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் மாஹே மண்டல நிர்வாகி அலுவலகம் முன் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அரசின் அலட்சியத்தால் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு திங்கள்கிழமை (ஜன.7) தர்ணா போராட்டம் நடைபெறுகிறது என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் மற்றும் மாஹே பகுதி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.