districts

img

பாஜக அரசு அடாவடித்தனம்: தொல். திருமாவளவன் கண்டனம்

செங்கல்பட்டு,ஆக. 29- தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ரூ.573 கோடி நிதியை விடு விக்காமல் தமிழ்நாட்டை மிரட்டும் ஒன்றிய அரசின் அடாவடித்தனத்தை தொல்.திருமாவளவன் கண்டித்துள்ளார். மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்தில் 2012 ஆம் ஆண்டு பஞ்சமி நில  மீட்பு போராட்டம் நடை பெற்றது. அப்போது நடந்த  துப்பாக்கிச் சூட்டில் பலி யான ஜான் தாமஸ், ஏழு மலை ஆகியோருக்கு நடத்திய நினைவஞ்சலி கூட்டத்தின் போது தொல். திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தனியார் நிலத்தை சேதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர் மாமல்லபுரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் திருமாவள வன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டது. இந்த வழக்கு,  செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு குற்றவியல்  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசா ரணைக்காக வியாழனன்று (ஆக.29) திருமாவளவன் நேரில் ஆஜரானார். இத னால், நீதிமன்றத்தில் ஏராள மான போலீசார் பாதுகாப் பிற்கு குவிக்கப்பட்டிருந்த னர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  திருமாவளவன்,“ கல்விக்  கொள்கையை பொறுத்த வரை தமிழ்நாடு முடிவு எடுப் பதற்கான அதிகாரம் இருக்கி றது. புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தினால் தான் நிதி  ஒதுக்கப்படும் என பிடிவாத மாக இருப்பது சரியல்ல என்றும் நிறுத்தி வைக்கப் பட்ட கல்வி மேம்பாட்டுக் கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.