districts

காரை ஏற்றி வாலிபர் கொலை

திருபெரும்புதூர்,ஜூலை 10-

     சுங்குவார் சத்திரம் அடுத்த மொளச்சூரை சேர்ந்தவர் விஷ்ணு (24). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்ப ரான ஏழுமலை(25) என்பவ ருடன் மொளச்சூர் பகுதி யில் இருந்து இருசக்கர வாக னத்தில் சுங்குவார் சத்திரம் நோக்கி சென்றார். அப்போது திரு வள்ளூர் மாவட்டம் பண்ணுர் பகுதியை சேர்ந்த பரங்கிராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மீது விஷ்ணுவும் அவரது நண்பர் ஏழுமலையும் வந்த இருச்சகர வாகனம் உரசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.  

   பின்னர் விஷ்ணுவும், ஏழுமலையும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிறிது தூரம் சென்றபோது பரங்கிராஜ் ஓட்டி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே  பலியானார்கள்.

;