districts

img

அழிந்தது குறுவை சாகுபடி: கருகியது 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்!

டெல்டாவின் கடைமடை பகுதி யான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பாசனத்திற்கு வீராணம் ஏரி முக்கிய நீர் ஆதார மாக உள்ளது. மேட்டூரிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர் கீழணைக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து வடவாறு வழியாக இந்த பகுதிகளுக்கு வருகிறது. வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர் மாவட்டம் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழி யாக  சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், குமராட்சி, புவனகிரி வட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கர்நாடக அரசு காவிரியில் நமது மாநிலத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப் பட்டது. தற்போது  40.8 அடி யாகக் குறைந்து விட்டது. இதில் சென்னைக்கு வினாடிக்கு 48.8 கன அடி மட்டும் குடி நீருக்கு அனுப்புகின்றனர்.  பாச னத்திற்காக வடக்கு ராஜன், கான்சாகிப் வாய்க்கால், பாசி முத்தான் ஓடை வழியாக 120 கன அடி மட்டுமே லீக்கேஜ் முறை யில் திறக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த அளவு தான் வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் சேறும் சகதியுமாக வண்டல் கலந்து ஓடுகிறது.

இதனை விவசாயிகள் மோட்டார் மற்றும் எஞ்சின் மூலம் எடுத்து காய்ந்து வரும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற  போராடி வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் தண்ணீர் போதிய அளவு கிடைக்காமல் குறுவை சாகுபடி பயிர்கள் முழு வளர்ச்சி இல்லாமல் கருகிவிட்ட நிலையில், கொஞ்ச நஞ்சம் கிடைத்த தண்ணீர் கொண்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்துள்ளனர். பயிர்கள் முளைத்து வரும் நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ள னர். இது குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன் கூறுகையில், “பருவமழை பொய்த்து விட்டதாலும் காவிரியில் உரிய தண்ணீரை வழங்க மறுத்ததால் டெல்டா பகுதியில் குறுவை முற்றிலும் அழிந்துவிட்டது”என்றார். சம்பா சாகுபடி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் காட்டு மன்னார்கோவில், குமராட்சி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் 30 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் கருகியுள்ளது என்றும் கூறி னார். வீராணம் ஏரியின் ராதா வாய்க்கால் பாசன சங்க தலைவர் ரங்கநாயகி, “குறுவை சாகுபடி கருகியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தற்போது சம்பா சாகுபடி பயிரிட போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஏ.காளிதாஸ்