திருவள்ளூர், நவ.19- மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கழகம் நவ 18 அன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஜம்பு தலைமை தாங்கினார். ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் மாநில பொது செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கோரிக்கை விளக்கி பேசினர். 45 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், அரசு கடந்த 14- உதவி பெறும் அரசு பள்ளிகளில் பயிலும் ஆங்கில பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வழங்க வேண்டும், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்க வேண்டும், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.