ராணிப்பேட்டை, பிப். 12 - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழி லாளர்கள் செங்கொடி சங்க (சிஐடியு) மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று (பிப்.12) ராணிப்பேட்டையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். காசிநாதன் தலை மையில் நடைபெற்றது. வேலை அறிக்கையினை சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பி. ராமசந்திரன், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கே. குழந்தைவேலு ஆகியோர் தாக்கல் செய்தனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் இ. பொன்முடி துவக்கி வைத்துப்பேசினார். சிஐடியு வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எ.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிர்மல் பள்ளிக்கு நிதியுதவி
இந்நிகழ்வில் சிஐடியு நடத்துகிற நிர்மல் பள்ளிக்கு நிதியாக 20 ஆயிரம் ரூபாய் மாநில நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு
சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவராக எஸ்.பரசுராமன், செயலாளராக எம்.பி.ராமச்சந்திரன், பொருளாளராக சி. ராஜா, துணைத்தலைவர்களாக வி. அருள் சீனிவாசன், எ. சீனிவாசன், முத்து ராஜ், துணை செயலாளர்களாக ஆர். மணிமாறன், கே. அர்ச்சுனன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக ஆர்.மணிகண்டன், செயலாளராக ஏ.தவராஜ், பொருளாளராக கே. குழந்தை வேலு துணைத் தலைவர்களாக எ. ராஜசேகர், என். அருண் பிரசாத், துணைச் செயலாளர்களாக பி. ரவிச்சந்திரன், ஸ்ரீதர், ஆர்.டில்லிபாபு, காவேரி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
ராணிப்பேட்டையில் அமைந்துள்ள கால்சியம் தொழிற்சாலையில் நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழி லாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். வாணியம்பாடியில் இஎஸ்ஐ மருத்துவமனை உடனடியாக சீரமைத்து மருத்துவர்களை பணியார்த்தம் செய்திட வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் கூலி வழங்காத டேனரி தொழிற்சங்க நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஷூ கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில் காண்ட்ராக்ட் முறையை ஒழித்திட வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதி யாக சிஐடியு மாநில துணைத் தலைவர் எ. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.