districts

img

நார்வே செஸ் தொடர் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா

ஐரோப்பா நாடான நார்வேயில் சர்வதேச செஸ் தொடர்  நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கிளாசிக்கல் பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா தனது 3ஆவது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை (நார்வே) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.காய்களை நகர்த்த போதுமான அவகாசம் கிடைக்கும் கிளாசிக்கல் பிரிவில் முதன்முறையாக தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். பிரக்ஞானந்தாவிடம் வீழ்ந்த கார்ல்சன் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். வைஷாலியும் முதலிடம் நார்வே செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான   வைஷாலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில்,  பிரக்ஞானந்தாவைப் போலவே வைஷாலியும் மூன்று சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;