districts

img

காரல் மார்க்ஸ் குறித்து தவறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

நாமக்கல்,பிப். 23- காரல் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியம் குறித்தும் உளறிய தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து நாமக்கல் எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை  ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் ஆகி யோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.