சென்னை, அக். 5- சிறு வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேரவையின் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: பேரவையின் தலை வர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர், அண்மையில் திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 43 மாவட்டத் தலைவர்கள், முக் கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேரவைத் தலைவராக எஸ்.சவுந்தர்ராஜன், பொதுச்செயலாளராக மெஸ்மர்காந்தன் வெள்ளையன், பொருளாளராக நியூ ராயல் எஸ்.பீர் முகமது ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மேலும் பேரவை நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட டைமன்ராஜா உள்ளிட்ட சிலரை பொறுப்புகளில் இருந்து நீக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து பொருட்களுக்கும் ஒரே சீரான ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் வரி விதிப்பில் விலக்கு அளிக்க வேண்டும். அரசியல் சார்பின்றி செயல்படுவது என்றும் சுதேசி கொள்கைகளை தொடர்ந்து வலி யுறுத்துவது என்றும் வணிகர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராடுவது என்றும் அவர் தெரி வித்தார். மேலும் சிறு வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் வணிகர்களிடம் கட்டாய வசூல் நடை பெறுகிறது. அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக் கடியாக உள்ள வணிகப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சவுந்தர்ராஜன் கூறினார்.