அறிவியல் எழுத்தாளர் ரமணன் எழுதிய ‘அறிவியல் ஆச்சரியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஏப்.4) தரமணியில் நடைபெற்றது. பாலர் பூங்கா பொறுப்பாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணை தலைவர் முனைவர் என்.மாதவன் நூலை வெளியிட பேராசிரியர் வி.முருகன் பெற்றுக் கொண்டார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் க.சாமிநாதன், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் மலர்விழி, பெருங்குடி கிளை தலைவர் க.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.