districts

img

சூப்பர் டிராபி ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: அசத்திய காஞ்சி மாணவர்கள்

காஞ்சிபுரம், ஆக 29 - காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேலோ இந்தியா பயிற்சி மையத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இந்த மாணவர்கள் திருச்சி கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ மற்றும் தமிழ்நாடு மாநில சூப்பர் டிராபி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ரோஷினி தங்கப் பதக்கமும், யுவாஞ்சலின் வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதேபோல், பி.மதுபாரதி  (சப் ஜூனியர்) 57 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், சி.ஹரிணி (சப் ஜூனியர்) 36 கிலோ எடை  பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், ச.கீர்த்திகா 40 கிலோ  எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  சோ.யாழினி (மினி சப் ஜூனியர்) 30 கிலோ எடை பிரிவு, அ.ஜீவானந்தம் 25 கிலோ எடை பிரிவு, ஸ்ரீ ரோஹித்  ராம் 45 கிலோ எடை பிரிவு, சீ.மோனிகா 28 கிலோ எடை பிரிவில்  வெண்கலப் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட விளை யாட்டு அலுவலர் சாந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற னர்.