திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதி யம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், ஊதியம் வழங்கப்பட வில்லை என்றும் தெரிய வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக புதனன்று (அக்.9) பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். இதனால் பள்ளியின் பிரதான வாயில் பூட்டப்பட்டது. காலை பள்ளிக்கு வந்த மாண வர்கள் பள்ளி திறக்கப்படா ததை கண்டித்து தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதை அடுத்து அங்கு வந்த பெற்றோர்கள், பள்ளி திறக்கப்படாததற்கு காரணம் கேட்டபோது பதில் அளிக்கயாரும் முன்வர வில்லை. இதனால் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களும், பெற்றோர் களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, விரை வில் பள்ளியை திறந்து நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளி நிர்வாகி கள் போலீசாரிடம் தெரி வித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் போராட் டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.